search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
    X

    காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

    • ராஜபாளையத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    திருச்சியை அடுத்த பெரியமிளகு பாறையை சேர்ந்த கணேசன் என்பவர் மகள் கோகிலா (வயது23). இவரும் ராஜபாளையத்தை சேர்ந்த குருமூர்த்தி (25) என்பவரும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் குருமூர்த்தி மனைவியிடம் வரதட்சணை வாங்கி வரும்படி வற்புறுத்தி உள்ளார். இதில் மனமுடைந்த கோகிலா விஷம் குடித்து விட்டார். அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கோகிலாவின் தாய் மஞ்சுளா ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×