என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர்-முதியவர் சாவு
- வெவ்வேறு விபத்துகளில் வாலிபர்-முதியவர் பரிதாபமாக இறந்தனர்.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆலங்குளம் பெரு மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது18). இவர் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் பகுதிக்கு சென்றுவிட்டு வெம் பக்கோட்டை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். பாறைப்பட்டி விலக்கு அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தந்தை ராஜா கொடுத்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் காளையப்பன்(57). இவர் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சிவகாசிக்கு வந்து கொண்டி ருந்தார். மீனம்பட்டி அருகே வந்தபோது அவருக்கு முன்னாள் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. வேன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வேனின் பின்னால் பயங்கர மாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட காளியப்பன் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே காளியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் வேனை ஓட்டி வந்த சாத்தூர் மேட்டுபட்டியை சேர்ந்த மாணிக்கவேல் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






