search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
    X

    நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

    • நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் உற்பத்தியில் நிலம், நீர் மற்றும் இடுபொருட்களே அடிப்படை காரணிகளாக உள்ளன. இவற்றுள் பயிர் சாகுபடிக்கு கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

    சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற பாரத பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதியாண்டில் 1200 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளை ஊக்குவித்திட துணைநிலை நீர் மேலாண்மை செயல்பா டுகள் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குறு வட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறு, குழாய் கிணறு அமைப்பதற்க்கு ரூ.25,000/ எண் மானியத்தில் 475 எண்களும், டீசல் பம்பு செட்டு / மின்மோட்டார் அமைப்பதற்கு ரூ.15,000/ எண் மானியத்தில் 737 எண்களும், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய், அமைப்பதற்கு ரூ.10,000/எண் மானியத்தில் 499 எண்களும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்க்கு ரூ.40,000/எண் மானியத்தில் 211 எண்களும் வழங்கப்பட உள்ளது.

    மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துக்களுக்கு முன்னூரிமை வழங்கப்பட்டு 80 சதவீத இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது.

    மேற்கண்ட திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறு, குறு விவசாயி சான்று, கணிணி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவ லகங்களை அணுகி பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    Next Story
    ×