என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிராக்டர் மோதி தொழிலாளி பலி
    X

    டிராக்டர் மோதி தொழிலாளி பலி

    • டிராக்டர் மோதி தொழிலாளி பலியானார்.
    • இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவி சமுத்திரஜோதியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிராக்டர் கணேசன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் ராஜ்கு மாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    மாடசாமி கோவில் தெரு பகுதியில் அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே இந்தப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென இன்று காலை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×