என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
- சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் சின்ன மருளூத்து பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 45), விறகு வெட்டும் தொழிலாளி. கடந்த சில மாதங்களாக அடிக்கடி மது குடித்து வந்தார். இதனால் இவருக்கும் மனைவி லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்றும் இது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மோகன்ராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






