என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
- மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
- சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமி புரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி பூபதி அம்மாள் (வயது 50).
இவர் தேவஸ்தானத்தில் உள்ள இசக்கிஅம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.அங்கு பொங்கலிட்டு வழிபாடு செய்துவிட்டு சாலை ஓரம் அமர்ந்து தனது உறவினர்கள் தேவி, பொன்னம்மாள் ஆகியோர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக முத்துகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பூபதி அம்மாளின் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் முத்துகிருஷ்ணன் காயமடைந்தார்.
இதுபற்றி சேத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story