என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூதனமாக பேசி 3 பவுன் நகையை திருடிய வாலிபர்
- நூதனமாக பேசி 3 பவுன் நகையை திருடியவர் கைது.
- சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சிவகாசி
சிவகாசி நேரு காலனி சேர்ந்தவர் ஜோதி (வயது 38). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் மதுரையில் வசிக்கும் உங்கள் சகோதரரின் நண்பர் என ஜோதியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனை நம்பிய ஜோதி அந்த நபரை வீட்டிற்குள் அழைத்து பேசினார். அப்போது அந்த நபர் தான் விருதுநகரில் உள்ள ரேசன் கடையில் வேலை பார்ப்பதாகவும், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தேவைப்பட்டால் இலவசமாக வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து ஜோதி அந்த நபருக்காக குளிர்பானம் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகை திருடி கொண்டு தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story






