என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- விருதுநகரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (11-ந் தேதி) காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இத்தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் கல்வித்த குதியை பதிவு செய்துவிட்டு வர வேண்டும். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.






