search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பங்குசந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 15 லட்சம் மோசடி
    X

    பங்குசந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 15 லட்சம் மோசடி

    • பங்குசந்தையில் முதலீடு செய்வதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • பணத்தை பெற்றுக் கொண்ட அவர் அதன் பின் பங்குச்சந்தை குறித்த நிலவரத்தை எனக்கு தெரியப்படுத்தவில்லை.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சவுடார்பட்டியைச் சேர்ந்தவர் ராணி (வயது 39). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் பாண்டியன் நகரில் குடியிருந்தார். இந்தநிலையில் அவர் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பாண்டியன் நகரைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் என்பவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் எடுப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி அவரது வங்கி கணக்குகளில் பல்வேறு தவணைகள் மூலம் ரூ. 14 லட்சத்து 83 ஆயிரம் செலுத்தினேன். பணத்தை பெற்றுக் கொண்ட அவர் அதன் பின் பங்குச்சந்தை குறித்த நிலவரத்தை எனக்கு தெரியப்படுத்தவில்லை.

    எனவே பணத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் சிவக்குமார் தர மறுத்து விட்டார். இதற்கு உடந்தையாக அவரது சகோதரி ஹேமலதா, கணவர் சந்திரபோஸ் உள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சிவக்குமார் உள்பட 3 பேர் மீதும் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    Next Story
    ×