என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அருப்புக்கோட்டையில் செயல்படாத புறக்காவல் நிலையம்
- அருப்புக்கோட்டையில் செயல்படாத புறக்காவல் நிலையம் உள்ளது.
- மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை
ஆங்காங்கே நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் எல்லை பகுதிகளில் புறக்காவல் நிலையங்களை அமைத்து இரவு பகலாக போலீசார் சோதனையிடவும், சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக்கவும் புறக்காவல் நிலையங்கள் அமைக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதனை செயல்படுத்த காவல்துறை முன்வரவில்லை. நகர் காவல் நிலையம் சார்பில் நகர் எல்லையான காந்திநகர், ராமசாமிபுரம், கோபாலபுரம் விலக்கு மற்றும் பாவடி தோப்பு ஆகிய 4 பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த புறக்காவல் நிலையத்திற்கு காவலர்கள் சரிவர வருவதில்லை. இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கு காவலர்கள் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்