search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆசிரியை மர்மச்சாவு
    X

    அரசு பள்ளி ஆசிரியை மர்மச்சாவு

    • அருப்புக்கோட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியை மர்மமாக இறந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் பண்டரிபாய் (வயது 51). இவர் பரளச்சி அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். 15 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து விட்டார். இதன் காரணமாக பண்டரிபாய் தனியாக வசித்து வந்தார். மேலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று உறவினர் தீபக்ராஜ் என்பவர் பண்டரிபாயை பார்க்க வீட்டுக்கு சென்றார். அப்போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பகுதியினர் கதவை உடைத்து பார்த்தபோது பண்டரிபாய் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பண்டரிபாய் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×