search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த மருத்துமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அதை இயக்குவதற்கு தேவையான ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×