என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி-இளம்பெண் மாயம்
- ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்லூரி மாணவி-இளம்பெண் மாயமாயினர்.
- போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவிகளை ேதடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம். படித்து வந்தார். மேலும் தையல் வகுப்பிற்கும் சென்று வந்தார்.
நேற்று வழக்கம் போல் தையல் வகுப்பிற்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாணவி மாயமானது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலையத்தில் அவரது தாய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை ேதடி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரும்பல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவரது 21 வயது மகள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கினார். நேற்று காலை பார்த்தபோது அவர் வீட்டில் இல்லை. மாயமான அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவர் மாயமானது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலம்மாளின் மகளும், வாலிபர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபருடன் மாயமா னாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்