search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 5 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 5 பேர் கைது

    • கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர். அதன் அடிப்படை யில் சிவகாசி, விருதுநகர் உள்ளட்ட பல்வேறு பகுதி களில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகிறார்கள்.

    கிருஷ்ணன்கோவில் போலீசார் சம்பவத்தன்று செம்பட்டையான்கால் சமத்துவபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த கார்த்திக்ராஜா (வயது25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 140 கிராம் கஞ்சா மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் தொடர்பு டைய எம்.புதுப்பட்டியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர் தர்காஸ் தெருவில் மேற்கு போலீசார் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்ற வீரபத்தி ரன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (22),பெரிய

    கொல்லப்பட்டியை சேர்ந்த காட்டுவா மைதீன், கலைஞர் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (20), மாரீஸ்வரன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பொட்ட லங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    Next Story
    ×