search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 இளம்பெண்கள்-தொழிலாளி மாயம்
    X

    3 இளம்பெண்கள்-தொழிலாளி மாயம்

    • 3 இளம்பெண்கள்-தொழிலாளி மாயமானார்
    • இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அப்பனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ராஜலட்சுமி விவாகரத்து தருமாறு கணவரை வலியுறுத்தி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜலட்சுமி தனது மகனுடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து திருச்சுழி போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மானகசேரியை சேர்ந்தவர் முத்துக்காளை. இவரது மகள் மகாலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற மகாலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகள் அனுசுயா அதே பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்று அனுசுயா பின்னர் வீடு திரும்பாமல் மாயமானார். இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல்லை சேர்ந்த வர் பால்சாமி (43), கட்டிட தொழிலாளி. இவர் குடும்ப தேவைக்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் பால்சாமிக்கும் அவரது மனைவி அழகுலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பால்சாமி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலன் இல்லை. இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×