search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா கடத்திய 3 பேர் கைது
    X

    கஞ்சா கடத்தி கைதான 3 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் படத்தில் காணலாம். 

    கஞ்சா கடத்திய 3 பேர் கைது

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 3 பேரின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் கே.ெதாட்டியப்பட்டி- ராஜபாளையம் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ்குமார் என்பவரை விசாரித்த போது முன்னுக்கு, பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தபோது 2 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது. உடனே போலீசார் வெங்கடேஷ்குமாரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட வெங்கடேஷ்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது ராஜபாளையத்தை சேர்ந்த சந்தனம், கோட்டை ஊரைச் சேர்ந்த சிவக்குமார் ஆகியோர் அதே பகுதியில் கஞ்சாவை சட்ட விரோதமாக விற்பது தெரியவந்தது.

    இதையடுத்து வெங்கடேஷ்குமார் கொடுத்த தகவலின்படி போலீசார் மேற்கண்ட 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 11 கிலோ கஞ்சா, கார், 2 மோட்டார் ைசக்கிள்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய 3 பேரின் வங்கி கணக்குகளையும் போலீசார் முடக்கினர்.

    Next Story
    ×