என் மலர்
வேலூர்
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
வேலூர்:
காட்பாடி வள்ளி மலை ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). நேற்றுமுன்தினம் பள்ளி குப்பம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அவரது பைக் ஏரிக்கரையில் கிடந்தது. இதனால் அவரை தொடர்ந்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிகுப்பம் ஏரியில் முருகன் பிணமாக மிதந்தார்.காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டனர்.
முருகன் உடலின் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறதது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து முருகன் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமிர்தியில் வன ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் பூங்காவில் உள்ள விலங்குகள் பறவைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அமிர்தி வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் பொதுமக்கள் பார்வைக் காக கூண்டில் அடைக்கப் பட்டுள்ளன.
கொரோனா பரவலை தடுக்க பூங்காவில் விலங்குகள் அடைக் கப்பட்டுள்ள கூண்டில் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
மேலும் மஞ்சள் பொடி தூவி வரு கின்றனர். நுழைவுவாயிலில் பொதுமக்களுக்கு கைகழுவும் வசதி செய்யப் பட்டுள்ளது.
வன ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர். அமிர்திப் பூங்காவில் உள்ள வன ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளித்து வரு கின்றனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இவர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவாமல் இருக்க பூங்கா காலவரையின்றி மூடப் பட்டுள்ளது.
கடந்தவாரம் அமிர்திப் பூங்காவில் உள்ள மான்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் விலங்குகளுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்போது ஊழியர்கள் 17 பேர் பாதிக் கப்பட்டுள்ளதால் பூங்காவில் உள்ள பறவைகள் மற்றும் விலங்குகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் கவுன்சிலர் சீட் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் மாநகராட்சி மேயர் பதவி (பொது) பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தி.மு.க& அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேர்காணல் நடந்தது.
வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட முன்னாள் கவுன்சிலர்கள் பலர் சீட் கேட்டுள்ளனர். இதில் சில வார்டுகள் பெண்கள் வாடாக மாறி உள்ளது.இதனால் முன்னாள் கவுன்சிலர்கள் அவர்களது மனைவிகளை வேட்பாளராக நிறுத்தவும் முனைப்பு காட்டி வருகின்றனர்.
வேட்பாளர் தேர்வு நேர்காணல் நடந்தபோது வேட்பாளர்களிடம் எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது பலர் ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவழிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அனைவருமே பணம் அதிக அளவில் செலவழிக்க தயாராக இருப்பதாக கூறி உள்ளதால் கவுன்சிலர் சீட்டுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் சில வார்டுகளில் யாருக்கு சீட் கொடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அமிர்தி பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளளது.
வேலூர்:
அமிர்தி பூங்கா பணியாளர்கள் அனைவருக்கும் நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.
இவர்கள் மூலம் விலங்குகளுக்கு பரவாமல் இருக்க பூங்கா மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரு வாரத்தில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலூர் மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் சுமார் 900-க்கும் மேற்பட்ட வழியோர கிராமப்புறங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படவில்லை.
இதற்கிடையில், தமிழ கத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பாலாற்றில் சுமார் 163 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பச்சக்குப்பம், மாதனூர், விரிஞ்சிபுரம், பொய்கை, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றின் கரையோரத்தில் அமைக்கப் பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான ராட்சத இரும்பு குழாய்கள் சேதமடைந்தன.
இதன் காரணமாக ஆம்பூருக்கு கீழ் பகுதியில் உள்ள வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி கூட்டுக குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டது.
மேலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் உள்ளூர் குடிநீராதாரங்களை பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டது.
ஆனால், உள்ளாட்சி அமைப்புகளால் போதிய அளவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத காரணத்தால் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட சில நகராட்சிகளில் குடிநீர் விநியோகத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களின் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்தாலும் போதவில்லை என்பதால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சீரமைப்புப் பணியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றனர்.
இந்த பணியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ÔÔபாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மாதனூர் பகுதியில் சுமார் 600 மீட்டர், பச்சக்குப்பம் பகுதியில் 15 மீட்டர், விரிஞ்சிபுரத்தில் 60 மீட்டர், பொய்கையில் 200 மீட்டர் அளவுக்கு குழாய்கள் சேமடைந்துள்ளன.
அதே போல், பள்ளி கொண்டாவில் இருந்து குடியாத்தம் நகராட்சிக்கு செல்லும் பிரதான குழாய், வேலூர் விருதம்பட்டு பகுதியில் இருந்து காட்பாடி பகுதிக்குச் செல்லும் பிரதான குழாயும் சேதமடைந்துள்ளன.
பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு பிரதான குழாயில் குடிநீர் விநியோகம் தொடர்பான சோதனை ஓட்டம் நேற்று நடத்தினோம். இதில் பச்சக்குப்பம் பாலாற்றில் புதைக்கப்பட்ட குழாயில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளோம்.
அதேபோல், விருதம்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குழாய் சேதமும் நேற்று தான் கண்டறியப்பட்டது. பிரதான குழாய் சீரமைப்புப் பணிகள் முடிந்துள்ளதால் அதிகபட்சம் ஒரு வாரத்தில் வேலூருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடங்கும் என்றனர்.
காட்பாடியில் லாரி சக்கரத்தில் சிக்கி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் பாலாஜி. இன்று காலை இருவரும் பைக்கில் வேலூர் நோக்கி வந்தனர். பாலாஜி பைக்கை ஓட்டி வந்தார்.
தாமோதரன் பின்னால் அமர்ந்திருந்தார். சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். பின்னால் இருந்த தாமோதரன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.
அவர் மீது லாரி ஏறி ஏறி இறங்கியது.தாமோதரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.பாலாஜி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தால் காட்பாடி வேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் சைதாப்பேட்டையில் பொதுமக்கள் மறியல் செய்த இடங்களில் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
வேலூர்:
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்தன.இதனால் கடந்த 3 மாதங்களாக வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.
இதனால் உள்ளூர் குடிநீர் திட்டங்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனர்.
மேலும் லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை, பஜனை கோவில் தெரு மெயின் பஜார் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு ஆற்காடு ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை. குடிப்பதற்கும், சமையலுக்கும் காசு கொடுத்து தண்ணீர் வாங்குகிறோம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சைதாப்பேட்டை மற்றும் பஜனை கோவில் தெரு பகுதிகளில் லாரிகள் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் சப்ளை செய்தனர்.
வேலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என டி.ஐ.ஜி ஆனி விஜயா கூறினார்.
வேலூர்:
வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா இன்று வேலூரில் திடீர் ஆய்வு செய்தார். கோட்டை அருகே மக்கான் சிக்னல் பகுதியில் போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து வடக்கு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:-
வேலூர் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆய்வு நடத்தி விரைவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.ஆட்கள் பற்றாக்குறை எனக்கூறி வார விடுமுறை அளிக்காமல் இருக்கக்கூடாது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் டிஎஸ்பிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் போலீஸ் பற்றாக்குறை விரைவில் நிரப்பப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி.ஆனி விஜயா ஆய்வு செய்தார்.
வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிவந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பாகாயம் போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
வேலூர், காட்பாடியில் ஜவுளிக்கடை மற்றும் ரெயில் நிலைய பார்க்கிங்கில் பைக்குகள் திருட்டு தொடர்பாக ஆற்காட்டை சேர்ந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர், காட்பாடி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 24), தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 13-ந் தேதி பொங்கல் பண்டிகையொட்டி புத்தாடைகள் எடுப்பதற்காக குடும்பத்துடன் ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஜவுளிக்கடையின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளார். சிறிதுநேரத்துக்கு பின்னர் கார்த்திகேயன் வந்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வாகன நிறுத்துமிடத்தில் பொருத் தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலவெங்கடராமன் மற்றும் போலீசார் நேற்று காலை நேஷனல் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 பேர் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர்.
அதில், அந்த மோட்டார் சைக்கிள் திருடுபோன கார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு காந்திநகரை சேர்ந்த ஜவகர் மகன் அஜித்குமார் (23), ஆற்காடு பகுதி-2 வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்த குணசீலன் மகன் இந்திரகுமார் (24) என்று தெரிய வந்தது.
இருவரும் வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளை கள்ளச்சாவி போட்டு திறந்து திருடி உள்ளனர்.
இதேபோல சாரதி மாளிகை முன்பு நிறுத்தப்பட்டிருந்த 3 பைக், மண்டித் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக், கொணவட்டம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பைக் திருடி உள்ளனர். காட்பாடி ரெயில் நிலையம் முன்பு உள்ள பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் கள்ளச்சாவி போட்டு திறந்து ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அஜித்குமார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்திருந்த 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டத்தில் இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் அலுவலக பணிகளில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலில் கொரோனா தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வேலூர் ஜெயிலில் துணை ஜெயிலர் ஒருவரும், டாக்டர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெயில் சூப்பிரண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 5 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருடன் அலுவலக பணிகளில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலில் கொரோனா தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் வேலூர் ஜெயிலில் துணை ஜெயிலர் ஒருவரும், டாக்டர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜெயில் சூப்பிரண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 5 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கே.வி.குப்பம், திருவலம் பகுதியில் 20-ந்தேதி மின்தடை செய்யப்படும் என மின்வாரியத்துறையினர் அறிவித்துள்ளனர்.
வேலூர்:
காட்பாடி அருகே உள்ள கார்ணாம் பட்டு மற்றும் வடுகந்தாங்கல் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின் சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதனால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேல்பாடி வள்ளிமலை, பொன்னை, விண்ணம்பள்ளி, அம்முண்டி, திருவலம் கார்ணாம் பட்டு, கரிகிரி, சேர்க்காடு, அம்மோர் பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டி பள்ளி, முத்தரசி குப்பம்,
பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு மற்றும் பி.கேபுரம், கே.வி குப்பம், மேல்மாயில், வடுகந்தாங்கல், பசுமாத்தூர், பள்ளத்தூர், பனமடங்கி, காளாம் பட்டு, மாளிய பட்டு,
செஞ்சி, லத்தேரி, திருமணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கீழ் அரசம்பட்டில் மாடு முட்டி முதியவர் பலியானார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள கீழ்அரசம்பட்டு கிராமத்தில் நேற்று மாடு விடும் விழா நடந்தது.
இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 140 காளைகள் பங்கேற்றன.உறுதிமொழி ஏற்ற பிறகு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
இந்த நிகழ்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர்.
விழாவின்போது ஆரணி அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாமதேவன் (வயது 60) என்பவரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கி வீசியது.
இதில் நாமதேவன் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் மாடு முட்டியதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாடு முட்டி முதியவர் இறந்ததால் விழாக்குழுவினர் 3 பேர் மற்றும் காளையின் உரிமையாளர் மீது வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






