என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் வேன் திருட்டு: நகர போலீசார் விசாரணை
- வேனை எடுத்துச் சென்று வாடகைக்கு ஓட்டி விட்டு மீண்டும் வேன் ஸ்டேன்டிலேயே நிறுத்திவிடுவார்.
- யாருக்கும வேன் குறித்த தகவல் தெரியவில்லை.
கடலூர்டு
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபு (வயது 43). இவர் சொந்த மான வேன் வைத்துள்ளார். இந்த வேனை சிதம்பரம் மேம்பாலம் அருகில் உள்ள வேன் ஸ்டேன்டில் நிறுத்தி வைப்பார். சவாரி வரும் போது, வேனை எடுத்துச் சென்று வாடகைக்கு ஓட்டி விட்டு மீண்டும் வேன் ஸ்டேன்டிலேயே நிறுத்திவிடு வார். அதன்படி, நேற்று இரவு வேனை ஸ்டான்டில் நிறுத்தினார். அனைத்து கதவுகளை மூடி பூட்டு போட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை வேன் ஸ்டேன்டிற்கு வந்து பார்த்தபோது வேனை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பிரபு, தனது வேன் குறித்து ஸ்டேன்டில் இருந்த டிரைவர்கள் மற்றும் வேன் உரிமையாளர்களிடம் விசாரித்தார். யாருக்கும வேன் குறித்த தகவல் தெரியவில்லை. இது குறித்து வேன் உரிமையாளர் பிரபு சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் கதவை உடைத்து, கள்ளச் சாவி போட்டு திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






