search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடியர் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அறிக்கை
    X

    எடப்பாடியர் தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்- முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அறிக்கை

    • அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.
    • சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    கோவை,

    முன்னாள் அமைச்சரும், முன்னாள் மேயருமான செ.ம.வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணா வழியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய, புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி நடத்திய அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை, தொண்டரில் ஒருவரான எடப்பாடியார் இன்றைக்கு வழிநடத்தி வருகிறார்.

    அவரை பொதுக்குழுவும், தொண்டர்களும் ஏகமனதாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து அ.தி.மு.க இயக்கத்தை வழிநடத்த அங்கீகாரம் வழங்கி உள்ளது.

    சிலர் கட்சிக்கு துரோகம் செய்யும் நோக்கத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதற்கு ஏற்ப நல்ல தீர்ப்பு வழங்கிய நீதி அரசர்களையும், நீதி தேவதையையும் வணங்குகிறோம்.

    2¼ கோடி தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஒருசிலர் மேற்கொண்டு வரும் செயல்பாட்டுக்கு நீதிமன்றம், பொதுமக்கள் தண்டனை வழங்க வேண்டும். நீதிமன்றங்களும் தேர்தல் ஆணையமும் கட்சி, கொடி, சின்னம் ஆகியவை எடப்பாடி தலைமையில்தான் என்று முடிவு செய்த பிறகும் சிலர் கரைவேட்டி மற்றும் கட்சிக்கொடியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.

    வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் நம்மில் ஒருவர், நம்மவர் எடப்பாடியார் தலைமையில் எம்.பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இதேபோல் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம்.

    மதுரை மாநாடும், பொதுமக்களும், நீதிமன்றங்களும் நல்ல தீர்ப்பு வழங்கி நாளை நமதே என்று அச்சாரம் வழங்கிய நிலையில் கண் துஞ்சாமல் கழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கும் எடப்பாடியாருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×