search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெஞ்சுவலி, விபத்து போன்ற நேரங்களில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி வகுப்பு
    X

    நெஞ்சுவலி, விபத்து போன்ற நேரங்களில் பொதுமக்களுக்கு முதலுதவி செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி வகுப்பு

    • காவலர்களுக்கு பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    நெல்லை:

    விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்யலாம் என்பது குறித்து நெல்லை மாவட்ட காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி வழங்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டார்.

    அதன்படி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு, சாலை விபத்து மற்றும் மாரடைப்பு போன்ற ஆபத்தான சூழ்நி லைகளில் பொதுமக்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்து அவர்கள் உயிரைக் காப்பாற்றலாம் என்பது குறித்து பயிற்சி வகுப்பு ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் மருத்துவர் வெங்கடேஷ்பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காவலர்களுக்கு பயிற்சி அளித்தனர். செயற்கை மனித உடல் மற்றும் மின்திரை மூலம் விபத்து மற்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்க ப்பட்ட பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து செய்து காண்பித்து செயல் முறை விளக்கத்து டன் பயிற்சி யளித்தனர்.

    பயிற்சி வகுப்பில் விபத்தில் காயம் அடைந்தவ ர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவம் குறித்தும், எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்தும் எடுத்துரைத்தனர்.

    பயிற்சியில் மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. சுப்பிரமணியன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×