என் மலர்
உள்ளூர் செய்திகள்

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தேவையற்ற பொருட்களை சேகரித்து வைக்கக் கூடாது-கலெக்டர் கிராந்திகுமார்பாடி பேட்டி
- கோவையில் இன்று கலெக்டர் கிராந்திகுமார்பாடி அதிரடி ஆய்வு
- சுய மருத்துவம் பார்க்காமல் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை எடுக்க வலியுறுத்தல்
கோவை,
கோவையில் மழைக்கா லம் தொடங்கி உள்ளதை முன்னிட்டு டெங்கு ஒழிப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று காலை கோவை காந்திபுரத்துக்கு வந்திருந்தார்.
அங்கு அவர் சுகாதாரத்துறை ஊழியர்களின் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பும் உடன் இருந்தார்.தொடர்ந்து கோவை ராம்நகர், காட்டூர் விவேகானந்தர் சாலை, செல்லப்பன் வீதி ஆகிய பகுதிகளிலும் சுகாதார ஆய்வுப்பணிகள் நடத்தப்பட்டன. பின்னர் கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோவை மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மும்முர மாக நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சுகாதார ஊழியர்கள் வீடு-வீடாக சென்று அங்கு தண்ணீர் பாத்திரங்கள் மூடப்பட்டு பயன்படுத்தப்படுகிறதா, தொட்டிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு உள்ளதா, வீட்டுக்குள் கயிறு, டயர், சிரட்டை உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளதா என்பது தொடர்பாக நேரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுதவிர வாரம் ஒருமுறை அனைத்து பகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக சுகாதாரப்பணிகள் உறுதிசெய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வீட்டுக்குள் தேவையற்ற பொருட்களை வைத்திருந்தால் அவற்றில் மழைநீர் தங்கி டெங்கு கொசுக்கள் வளர வாய்ப்பு ஏற்படும்.
கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புக்காக 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைப்படும் வகையில் இல்லை. பொதுமக்களுக்கும் டெங்கு பாதிப்பு குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.
கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகளை தடுக்கும் வகையில் ஏற்கனவே தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பா ட்டில் உள்ளது. மேலும் கூடுதலாக ஊழியர்களை நியமித்து டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டு உள்ளோம்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பை-கூளங்களை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. பொதுமக்கள் வசிப்பிடங்களில் டெங்கு கொசுக்கள் வளர்வதற்கு ஏதுவாக தேவையற்ற பொருட்களை சேகரித்து வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும். இது அவர்களிடம் மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கும்.
மேலும் வணிக நிறுவனங்களில் கொசுக்கள் உற்பத்தி ஆவதற்கு ஏதுவாக தேவையற்ற பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளனவா என்பதை மாவட்ட நிர்வா கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே பாதிக்கப்பட்டோர் சுய மருத்துவம் பார்க்காமல் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சென்று பிரத்யேக சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






