search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
    X

    குழந்தையுடன் ஆம்புலன்ஸ் பணியாளர்கள்.

    108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

    • நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

    திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி., தியேட்டர் பஸ் நிறுத்தம் அடுத்துள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மனைவி கனகா ( வயது 32). கர்ப்பிணியான இவருக்கு நள்ளிரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து கணவர் 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டார்.

    குமார்நகரில் இருந்து விரைந்து வந்த ஆம்புலன்ஸ், கனகாவை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி செல்லும் வழியில் பிரசவ வலி அதிகமானது.

    இதனையடுத்து டெக்னீசியன், டிரைவர் குறளரசன் பிரசவம் பார்த்தனர். வழியிலேயே ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    Next Story
    ×