search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கும் ஆசிரியை
    X

     பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை  தொடங்கிவைத்த ஆசிரியை.

    பள்ளி மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசு வழங்கும் ஆசிரியை

    • மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.
    • ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட காதர் பேட்டையில் நகராட்சி நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் விசாலாட்சி. இவர் மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார். இந்தநிலையில்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிறந்தநாள் பரிசளிப்பு திட்டத்தை தன் சொந்த முயற்சியில் தொடங்கி உள்ளார்.

    இந்த திட்டமானது மழலையர்களின் பிறந்தநாளன்று சிறிய தொகுப்பில் பென்சில், அளவுகோல்,ரப்பர் ,சார்ப்னர் போன்ற கல்வி உபகரணங்கள் கொண்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும்.

    தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியை விசாலாட்சி முயற்சி எடுத்துள்ளார். அவரது செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    Next Story
    ×