search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரைப்பாளையம் பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு - மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்
    X

    கோப்புபடம்.

    கரைப்பாளையம் பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்த பாம்பு - மாணவர்கள் அலறியடித்து ஓட்டம்

    • ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா்.
    • பள்ளி மேற்கூரையில் மறைந்திருந்த பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினா் உயிருடன் பிடித்தனா்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்பாளையத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஆசிரியா் ஒருவா் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்குள்ள பெஞ்சுக்கு அடியில் பாம்பு இருப்பதை பாா்த்த மாணவா்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினா்.

    தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து பள்ளியின் மேற்கூரையில் மறைந்திருந்த 6 அடி நீள நாக பாம்பை சுமாா் ஒரு மணி நேரம் போராடி உயிருடன் பிடித்தனா்.

    தாராபுரம் இறைச்சி மஸ்தான் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். கட்டடத்தில் சுமாா் ஒரு மணி நேரம் தேடியும் பாம்பு கிடைக்கவில்லை. அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்திருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா். முன்னதாக அங்கன்வாடி கட்டடத்தில் பாம்பு புகுந்த தகவலை அறிந்த பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச்சென்றனா்.

    Next Story
    ×