search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனைக் கூடத்தில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை
    X

    கோப்பு படம்.

    விற்பனைக் கூடத்தில் ரூ.1.50 கோடிக்கு பருத்தி விற்பனை

    • வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனா்.
    • 2,122 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    இதில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவருகின்றனா். பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று பருத்தியை கொள்முதல் செய்கின்றனா்.

    இந்நிலையில் இந்தவாரம் நடைபெற்ற ஏலத்தில் 2,122 குவிண்டால் பருத்தி விற்னைக்கு கொண்டுவரப்பட்டது. குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.7,828 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.1.50 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனையானது.

    இத்தகவலை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×