search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மூலக்கடையில் சாக்கடை அடைப்பை சரி செய்யாவிட்டால் மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு
    X

    சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியதை படத்தில் காணலாம். 

    திருப்பூர் மூலக்கடையில் சாக்கடை அடைப்பை சரி செய்யாவிட்டால் மறியல் போராட்டம் - பொதுமக்கள் அறிவிப்பு

    • மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது.
    • வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் நேற்று மாலை பெய்த மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றதோடு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் அப்பகுதி வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்தது.சாலையோரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் கடைகளின் முன்பு சாக்கடை நீர் தேங்கியது.

    சாக்கடை அடைப்பை நீக்க கோரி பலமுறை அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×