என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான இளங்கோவன்.
பல்லடம் பல் டாக்டர் வீட்டில் திருடியவர் கைது
- சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன் , பல் மருத்துவர். பல்லடத்தில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
- வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
பல்லடம்:
சென்னையை சேர்ந்தவர் பிரபாகரன் , பல் மருத்துவர். பல்லடத்தில் தனியாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார்.இந்தநிலையில் மாணிக்கபுரம் சாலை பாரதிபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியே வசித்து வருகிறார். கடந்த 18ந் தேதி சென்னைக்கு சென்று தனது குடும்பத்தினருடன் இருந்துவிட்டு கடந்த 25ந் தேதி பல்லடம் திரும்பினார். வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ. 95 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ மற்றும் கதவு ஆகிய இடங்களில் கை ரேகைகளை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே சென்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார் இதையடுத்து போலீசார் அவரை துரத்திப் பிடித்தனர்.பின்னர் அவரை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது,அவர் பல் டாக்டர் வீட்டில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.
மேலும் போலீசாரது விசாரணையில் மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த பூதப்பாண்டி மகன் இளங்கோவன் என்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரிடமிருந்து ரொக்கம் ரூ. 95 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் மீது அவிநாசி, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.






