என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையில் கிடந்த ரூ.40,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த சிறுமிக்கு பாராட்டு
- போலீஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.
- உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம்.
பல்லடம்:
பல்லடம் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ்(வயது 42). இவரது மனைவி நித்தியலட்சுமி(38). இவர்களது மகள் தர்ஷினி(13). இவர் பல்லடத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்7 ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் தனது தாய் நித்திய லட்சுமி மற்றும் உறவுக்கார பெண் பிரியா ஆகியோருடன் துணி எடுக்க வேண்டி பல்லடத்தில் போலீஸ் நிலையம் எதிரே உள்ள துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.
அப்போது ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.40,000 பணத்தை கண்ட சிறுமி தர்ஷினி அதனை எடுத்து தனது தாயிடம் கொடுத்துள்ளார். பின்னர் தாய், மகளும் துணிக்கடையின் எதிரே உள்ள பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு சென்று கண்டெடுத்த ரூ.40,000 ரொக்க பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பள்ளி சிறுமியின் நேர்மையான செயலை கண்டு போலீசார் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டி வெகுமதி அளித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், சாலையில் இருந்து ரூ.40 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்கள் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை பெற்று செல்லலாம் என்று அறிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்