என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பஸ்சில் இருந்து தவறி விழுந்து காவலாளி பலி
- கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் பல்லடத்தில் ஏறினர்.
- பலத்த காயம் அடைந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வெள்ளகோவில்:
பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 54) . இவர் திருப்பூரில் உள்ள ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரும் இவரது மனைவி பாரதி (45) ஆகியோர் நேற்று இரவு திருமணஞ்சேரி கோவிலுக்கு செல்வதற்காக கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ்சில் பல்லடத்தில் ஏறினர்.
பாரதி பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்தார். வேல்முருகன் பஸ்சின் பின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அரசு பஸ் நேற்று இரவு 11.40 மணி அளவில் வெள்ளகோவில் அருகே வெள்ளமடை என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேல்முருகன் பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்தார்.
அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் வேல்முருகன் மீது ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து, வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்