என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2பேர் கைது
- அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்
- விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது.
திருப்பூர்:
விருதுநகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 35) . இவர் மங்கலம், கோம்பக்காட்டு புதுாரில் பகுதியில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர்.
முத்துசெல்வம் கடந்த ஜனவரி 1-ந் தேதி அதிகாலை நேரத்தில் அறையில் இருந்து சென்றவர் நீண்ட நேரமாக காணவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இதில் அதிகாலை நேரத்தில் விசைத்தறி கூடம் அருகே முத்து செல்வம் நடந்து சென்ற போது திருடன் என சந்தேகித்து, விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, துரைபழனிசாமி (45), சவுந்தரராஜன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.
போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் இச்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (50), கோம்பக்காட்டு புதுாரை சேர்ந்த முருகேசன் (35) ஆகிய இருவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்