search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி
    X

    கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

    தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவுநாள் நிகழ்ச்சி

    • தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.
    • பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி. கே. டி. நாகராஜன், 3வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம். எஸ் .ஆர். ராஜ், தெற்கு மாநகர இளைஞர் அணி பிஆர்.செந்தில்குமார், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,36 -வது வார்டு கவுன்சிலர் திவாகர் மற்றும் அமைப்பாளர் ,கவுன்சிலர்கள் ,நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×