search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போட்டித்தேர்வுகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் -   மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
    X

    நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. 

    போட்டித்தேர்வுகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் - மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

    • 1261 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
    • திருப்பூர் மாவட்டத்தி 17,780 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசுப்பள்ளியில் பயிலும் 1261 மாணவ, மாணவிகளுக்கு ரூ.63,77,474 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா சைக்கிள்களை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது :- திருப்பூர் மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 17,780 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.24 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் போது மிகுந்த வலிமையுடன் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும். தவறான முடிவுகளுக்கு செல்லக்கூடாது. நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியும் வளர்த்துக் கொண்டு போட்டித்தேர்வுகளை எதிர் கொள்ள வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் , மாவட்ட கல்வி அலுவலர் பழனிச்சாமி, மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×