search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 39 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 21-ந் தேதி 34ம் கட்ட முகாம் நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 39 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - 21-ந் தேதி 34ம் கட்ட முகாம் நடக்கிறது

    • தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 40 லட்சமாக உயருமென சுகாதாரத்துறை நம்பிக்கையுடன் உள்ளது.
    • 7ந் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 36 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 34 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வருகிற 21ந்தேதி நடக்கிறது. தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 40 லட்சமாக உயருமென சுகாதாரத்துறை நம்பிக்கையுடன் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை, 21 லட்சத்து, 43 ஆயிரத்து, 139 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 94 ஆயிரத்து 288 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 384 பேரும் என மொத்தம் இதுவரை 39 லட்சத்து 91 ஆயிரத்து 811 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.அதிகபட்சமாக 19.85 லட்சம் ஆண்கள், 18.51 லட்சம் பெண்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். கடைசியாக கடந்த 7ந் தேதி, மெகா தடுப்பூசி முகாம் நடந்த நிலையில், இந்த வாரம் வரும் 21 ந் தேதி, 34 ம் கட்ட மெகா முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் இம்மாதம், 7ந் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 36 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் 29 ஆயிரத்து 600 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 39.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருப்பதால், வரும், 21ம் தேதி நடக்கும் முகாமில் மொத்த தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை, 40 லட்சத்தை எட்டுமென சுகாதாரத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×