என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் லோடு ஆட்டோ விபத்தில் கிளீனர் பலி
    X

    அப்பளம் போல நொறுங்கிய லோடு ஆட்டோவை படத்தில் காணலாம்.

    உடுமலையில் லோடு ஆட்டோ விபத்தில் கிளீனர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார்.
    • இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.

    உடுமலை :

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த மனப்பூர் பகுதியை சேர்ந்தவர் விஜி (வயது 38).டிரைவரான இவர் கேரளாவிலிருந்து கழிவு பேப்பர் ஏற்றிக் கொண்டு உடுமலை அருகே உள்ள தனியார் பேப்பர் மில்லுக்கு வந்துள்ளார். அங்கு பேப்பரை இறக்கி விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்த அவர் அதிகாலை உடுமலை பொள்ளாச்சி ரோட்டிலுள்ள தனியார் கல்லூரி அருகில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக ரோட்டு ஓரத்தில் லாரியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லோடு ஆட்ேடா ஒன்று நின்று கொண்டிருந்த லாரியில் பயங்கரமாக மோதியது. இதில் மோதிய லாரியின் முன் பகுதி அப்பளம் போல நொறுங்கியது. அந்த லாரியில் இடது புறம் அமர்ந்திருந்த கேரள மாநிலம் மணப்புரம் பகுதியைச் சேர்ந்த கிளீனர் உன்னிகிருஷ்ணன் (வயது 52) இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த டிரைவர் ராமச்சந்திரனை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×