search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி
    X

    கோப்புபடம்.

    உடுமலையில் பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின விழிப்புணர்வு பேரணி

    • குட்டை திடலில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார்.
    • பிரதமரின் வழிகாட்டுதல் படி வீடு வீடாக தேசிய கொடி ஏற்றும் வகையில் விழிப்புணர்வு நடைபெற்றுள்ளது

    உடுமலை :

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. மற்றும் வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழா விழிப்புணர்வு பேரணி உடுமலையில் நடந்தது.

    குட்டை திடலில் துவங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாஜ.க.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் தலைவரும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், சண்முகப்பிரியா, மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மாவட்ட பார்வையாளர் மலர்க்கொடி, ஜோதீஸ்வரி, கந்தசாமி, தென்னிந்திய கிரிக்கெட் சங்க செயலாளர் ராகுல், ராஜா, முத்துசாமி, மாவட்ட செயலாளர் வடுகநாதன், கண்ணாயிரம் ,சமூக ஆர்வலர் குரு பிரசாத் ,சித்த மருத்துவர் கார்த்திகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    காயத்ரி ரகுராம் கூறுகையில், பிரதமரின் வழிகாட்டுதல் படி உடுமலையில் வீடு வீடாக தேசிய கொடி ஏற்றும் வகையில் பா.ஜ.க. சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களை போற்றும் வகையில் தீபாவளி, பொங்கல் கொண்டாடுவது போல் சுதந்திர தினத்தையும் கொண்டாட வேண்டும். சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார்.

    Next Story
    ×