என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதி கொடுக்கும் முதியவர்
- ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
- பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் ஆதார் கார்டு, இலவச வீட்டு மனை போன்ற பணிகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை புரிகின்றனர்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு எழுத 50க்கும் மேற்பட்டோர் மனுக்களை எழுதி தருகின்றனர். இந்த மனுவிற்கு 50 முதல் 100 ரூபாய் வரை பொதுமக்களிடம் கட்டணம் வாங்குகின்றனர். சிலர் பொதுமக்களுடைய பணி வேலைகளை செய்து தருவதாக கூறி அதிக பணம் பெற்று விடுகின்றனர்.
இவர்கள் மத்தியில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல்(வயது 76) என்பவர் திருப்பூரில் தங்கி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
தனக்கு அருகில் உள்ள ஜெராக்ஸ் கடையினர் மனு எழுத பேப்பர்களை இலவசமாக தருவதாகவும் மனு எழுத வருபவர்கள் தேநீர் அருந்த ரூ.10, ரூ.20 வலுக்கட்டாயமாக தருவதாக கூறுகிறார். இலவசமாக மனு எழுதி கொடுக்கும் சண்முகவேலின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்