search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் பாழடைந்த கட்டிடத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி

    • ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது.
    • உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே குடியிருப்பு பகுதியில் பாழடைந்த கட்டிடத்திலிருந்து நேற்று கடும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்திய போது அங்கு ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.

    5 நாட்களுக்கு முன்பு அவர் இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். விசாரணையில் இறந்தவர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 54) என்பதும், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் இந்த பாழடைந்த கட்டிடத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும், உடல்நல குறைவால் இறந்ததும் தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×