search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு
    X

    கோப்புபடம்.

    பல்லடத்தில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

    • 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் முகவரி கேட்டனர்.
    • பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    பல்லடம் :

    பல்லடம் மங்கலம் ரோடு இளங்கோ வீதியை சேர்ந்த கோபால் மனைவி கீதா(வயது 60) . நேற்று பி.டி.ஓ. காலனியில் உள்ள ராஜவிநாயகர் கோயிலுக்கு செல்ல சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீதாவிடம் முகவரி கேட்டனர்.

    அவர் முகவரி சொல்வதற்காக திரும்பிய போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா சம்பவ இடத்தை பார்வையிட்டார். இச்சம்பவம் குறித்து கோபால், பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பல்லடம் பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×