என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
    X

    திருப்பூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

    • வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அழித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஒருவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாகவும் கஞ்சா செடிகள் வளர்ப்பதாகவும் அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் குன்னத்தூரில் உள்ள சின்னசாமி (வயது 45) என்பவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு அறையில் 10 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்து அதனை அழித்தனர். மேலும் அதன் அருகே இரண்டு கஞ்சா செடிகளை வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனையும் அழித்தனர்.

    தொடர்ந்து சின்னச்சாமியிடம் விசாரணை நடத்திய போது தனது சொந்த பயன்பாட்டிற்காக கள்ளசாராயம் காய்ச்சியதாகவும் கஞ்சா செடி வளர்த்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×