என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரும்பு கம்பிகளை திருட முயன்ற வாலிபர்கள் பிடிபட்டனர்
    X

    கிராம மக்களிடம் பிடிபட்ட 4 வாலிபர்கள்.

    இரும்பு கம்பிகளை திருட முயன்ற வாலிபர்கள் பிடிபட்டனர்

    • தொடர் திருட்டால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • 4 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் சுற்று வட்டார பகுதியில் விவசாய மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் கம்பிகள் உள்பட பல்வேறு திருட்டு தொடர்ந்து நடை பெற்று வந்தன. இது குறித்த புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்தன. தொடர் திருட்டால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றிரவு அகரமாங்குடி பகுதியில் நெடுஞ்சாலை பணிக்கு பயன்படுத்தும் இரும்பு கம்பிகளை 4 வாலிபர்கள் திருட முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 4 திருடர்களையும் விரட்டி பிடித்து அய்யம்பேட்டை போலீசில் ஒப்படை த்தனர். பிடிபட்ட 4 வாலிபர்கள் அகரமாங்குடி, பொன் மான்மேய்ந்த நல்லூர்,பெருங்கரை.கா வலூர் பெருமாக்கநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் விவசாய மின் மோட்டார்கள் மற்றும் காப்பர் கம்பிகள் உள்பட பல்வேறு திருட்டில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் 4 பேரையும் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×