என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் திண்ணையில் கழற்றி வைத்த தங்க செயினை திருடி சென்ற வாலிபர்கள்
- கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் தங்கச்செயினை வீட்டில் திண்ணையில் கழட்டி வைத்திருந்தார்.
- திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது46). இவரது மகள் மோகனப்பிரியா. சம்பவத்தன்று தனது கழுத்தில் அணிந்திருந்த 1/2 பவுன் தங்கச்செயினை வீட்டில் திண்ணையில் கழட்டி வைத்திருந்தார். அப்போது கோழி பிடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திண்ணையில் இருந்த தங்க செயினை திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து தங்க செயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story






