என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் வேறு ஒரு பெண்ணுடன் சென்றதால் விஷம் குடித்த இளம்பெண்
- மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து திடீரென இளம்பெண் பூச்சி மருந்ைத கரைத்து குடித்தார்.
- இருக்ைக அருகில் இருந்தவர் இளம்பெண்ணை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரடிபள்ளத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவரது கணவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குன்னூரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இது காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தனர்.
கோவையில் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
இந்தநிலையில் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை இளம்பெண் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாலிபர் இளம்பெண்ணுடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்தார்.
இதன் காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனையடுத்து அவர் வாலிபரை பிரிந்து சொந்த ஊருக்கு செல்வது என முடிவு செய்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் கோவையில் இருந்து குன்னூருக்கு புறப்பட்டார். இதற்காக அவர் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு சென்றார். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து திடீரென அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூச்சி மருந்ைத கரைத்து குடித்தார். பின்னர் பஸ்சில் ஏறி குன்னூக்கு சென்றார். பஸ்சில் இருக்கையில் இருந்த அவர் மயங்கினார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர் இளம்பெண்ணை மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






