search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை அருகே கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம்-செல்போன் பறித்த வாலிபர்கள்
    X

    கோவை அருகே கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம்-செல்போன் பறித்த வாலிபர்கள்

    • கார் சாவியை பறித்து தலையில் வெட்டி துணிகர கொள்ளை
    • 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர் பிரசாந் (வயது29). கால்டாக்சி டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் இரவு பணியில் இருந்த போது கால்டாக்சி ஆப் மூலமாக சின்னியம்பாயைத்தில் இருந்து டீச்சர் காலனி செல்வதற்கு கார் புக்கிங் செய்யப்பட்டது.

    இதனையடுத்து டாக்சி டிரைவர் பிரசாத் புக் செய்யப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த 5 வாலிபர்கள் காரில் ஏறினர்.

    அப்போது அவர்கள் வெங்கடாபுரத்தில் நண்பர் ஒருவரை இறக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து பிரசாத் காரை ஓட்டிக்கொண்டு மாநராடு மைதானம் அருகே சென்று காரை நிறுத்தினார்.

    அப்போது 5 பேரும் சேர்ந்து திடீரென பிரசாத்தி டம் கார் சாவியை பறித்த னர். அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டினர். பின்னர் பிரசாத்திடம் இருந்து ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை பறித்த னர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை மிரட்டி காருடன் ராவுத்தூர் ரெயில்வே கேட் அருகே சென்றனர். பின்னர் காரை கொடுத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கால்டாக்சி டிரைவர் பிரசாத் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×