என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
- கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
கோபி:
கோபிசெட்டிபாளையம அருகே கொடிவேரி அணை நுழைவுவாயில் அருகே கடத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் மோகனன், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஒட்டர்பாளையத்தை சேர்ந்த மோகன் குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா பொட்டலங்களும், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story