என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
    X

    கோவையில் வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

    • தாய் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை பழையூர் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயது வாலிபர். இவர் 39 வயதான ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

    அவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த பெண் தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்து அவர் வாலிபருடன் வந்து விட்டார். அந்த பெண்ணின் 15 வயது மகளும் இவர்கள் பராமரிப்பிலேயே இருந்தனர்.அந்த பெண் வேலைக்கு சென்ற பிறகு தனியாக இருக்கும் அவரது மகளுக்கு வளர்ப்பு தந்தையான அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பல நாட்களாக அவரது தொல்லை நீடித்துள்ளது.

    இந்தநிலையில் நேற்று அந்த பெண் வெளியே சென்று இருந்தார். அந்த சமயம் 15 வயது சிறுமிக்கு வாலிபர் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இதுபற்றி தனது தாய்க்கு தகவல் தெரிவித்து அந்த சிறுமி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

    Next Story
    ×