search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் ஆஸ்பத்திரி பெயரில் போலி இறப்பு சான்றிதழ் வழங்கிய வாலிபர் கைது
    X

    தனியார் ஆஸ்பத்திரி பெயரில் போலி இறப்பு சான்றிதழ் வழங்கிய வாலிபர் கைது

    • புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் சத்யராஜ் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை செல்லபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் கிரதிக் ஆதித்யா( வயது 30). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவர் செல்வபுரம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எல்ஐசி காலனியில் இ சேவை மையம் நடத்தி வரும் சத்யராஜ் (40 ) என்பவர் எங்களது ஆஸ்பத்திரி டாக்டர் பெயரில் போலியான இறப்பு சான்று மற்றும் போலியான முத்திரைகளை பயன்படுத்தி சான்று வழங்கி வருகிறார்.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீசார் சத்யராஜ் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×