என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.70 லட்சம் கொள்ளையடித்த வாலிபர் கைது
- இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
- இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
கோவை,
கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது50). ரியல் எஸ்டேட் அதிபர்.
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நண்பரான கண்ணன் என்பவருக்கு கொடுப்பதற்காக காரில் புறப்பட்டார்.
இரவு 9.30 மணியளவில் ஈஸ்வர மூர்த்தி தனது காரை சிட்ரா அருகே உள்ள ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது காரில் இருந்த பணம் மாயமாகி இருந்தது. ஈஸ்வரமூர்த்தி சாப்பிட சென்றதை நோட்டமிட்டு, மர்மநபர் கார் கண்ணாடியை உடைத்து காருக்குள் இருந்த ரூ.70 லட்சம் பணத்தைத் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஈஸ்வர மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.விசாரணை மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பணத்தை கொள்ளையடித்தது ஈரோடு குமாரபாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 33) என்பது தெரிய வந்தது. அவரை பீளமேடு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து ரூ.24 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.






