என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
- சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சூரத் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
- திருவள்ளூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்:
ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் சூரத் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வெங்கடேசன், ஏகாட்டூர் ஆனந்தன், மோகன்தாஸ், திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஜான் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்






