என் மலர்
உள்ளூர் செய்திகள்

விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த SDPI நிர்வாகிகள்
- எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் காங்கிரசில் இணைந்தனர்.
- நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களியக்காவிளை பகுதியை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள் மற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த தினவிழா நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தினத்தையொட்டி குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
குமரி தினத்தை முன்னிட்டு குமரி தந்தை மார்ஷல் நேசமணி சிலைக்கு குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.






