search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை
    X

    செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

    • ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரகு (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகு நல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரகு வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.

    இதையடுத்து மனவேதனையில் இருந்த ரகு வீட்டினுள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×